திருச்செங்கோடு, டிச.19: திருச்செங்கோட்டில் 58வது தேசிய மருந்தாளுனர் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் சுவாமி விவேகானந்தா பார்மசி கல்லூரியை சேர்ந்த, சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். பழைய பஸ் நிலையத்தில் துவங்கிய பேரணியை, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை டாக்டர் செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சுவாமி விவேகானந்தா பார்மசி கல்லூரி முதல்வர் முருகானந்தம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள், இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, அரசு மருத்தவமனையில் முடிவடைந்தது.