கரூர், டிச. 18: அமராவதி பாலத்தில் ஏற்பட்ட பள்ளங்களை சரிசெய்ய வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் லைட்ஹவுஸ், திருமாநிலையூரை இணைக்கும் சாலை பாலம் உள்ளது. அமராவதி குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ளதால் வாகனங்கள் செல்ல செல்ல பள்ளங்களில் உள்ள விரிசல் அதிமாகிக்கொண்டே போகிறது.