ஈரோடு, டிச. 13: இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவன தலைவர் வீரா.சிதம்பரம் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். சித்தோடு ஐஆர்டிடி கல்லூரி பகுதிகளில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை மேட்டூர் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் வரை நீட்டிக்க வேண்டும். பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் சூரியம்பாளையம் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி வீடுகள் கட்ட இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.