தக்கலை, டிச.13: தக்கலையில் குடியிருப்பு பகுதியில் புகுந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்த குரங்குகளை வனத்துறை பிடித்து சென்றனர்.
பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட தக்கலை பேலஸ் ரோடு, மார்க்கெட் ரோடு, தர்ஹா ரோடு, டானா முடுக்கு பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. இந்த குரங்குகள் வீடுகளில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றதுடன், கூரைகளில் ஓடுகளை சேதப்படுத்தின. மேலும் தென்னை மரத்தில் இருந்து தேங்காய்களை பறித்ததுடன் வீட்டுத் தோட்டங்களை நாசம் ெசய்தன. குரங்குகள் தொல்லை அதிகரித்ததால் பெண்கள், குழந்தைகள் அச்சம் அடைந்தனர்.