கமுதி அருகே ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி

கமுதி, டிச. 12: கமுதி அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் முதியவர் பலியானார். கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி (55). இவர் கமுதிக்கு சந்தைக்கு வருவதற்கு, பாம்புல்நாயக்கன்பட்டியில் இருந்து ஷேர் ஆட்டோவில் வந்தார். கமுதி-சுந்தராபுரம் பகுதியில் ஆட்டோ வரும்போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் ராமசாமி படுகாயமடைந்தார். கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் ஆட்டோ டிரைவர் அந்தோணிராஜ் (27), தனம் (40), அய்யரம்மாள் (50), முத்துமாரி (41) ஆகியோர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமசாமியின் மனைவி காளியம்மாள் அளித்த புகாரின்பேரில் கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: