ஆர்.எஸ்.மங்கலம், டிச. 12: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சனவேலி அரசுப் பள்ளியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் சனவேலி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மனித உரிமைகள் தின விழா பள்ளி தலைமை ஆசிரியை (பொ) மெஸியானந்தி தலைமையிலும், முதுகலை ஆசிரியர் தங்கப்பாண்டியன் முன்னிலையிலும் நடைபெற்றது.
உலக மனித உரிமைகள் தினம் என்பது 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் நாள் ஐக்கிய நாடுகள் அவையில் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தப்படுத்திய நாளாகும். அந்த நாளை குறிக்கும் விதமாக மனித உரிமை நாள் கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதற்கும், மற்ற மனிதரை வாழவிடும் நெறிமுறையை உணர்த்துவதற்காகவும் எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும் உரிமையிலும், கண்ணியத்திலும் அனைவரும் சமமானவர்கள் என்பதையும் இந்த நாள் பிரகடனம் வலியுறுத்துகிறது.