மறைந்த இசை ஆசிரியர் குடும்பத்திற்கு நிதியுதவி அனைத்து சிறப்பாசிரியர் சங்கம் வழங்கல்

திருத்துறைப்பூண்டி, டிச.12: திருத்துறைப்பூண்டி அரியலூர் பகுதியை சேர்ந்த மறைந்த பகுதி நேர ஆசிரியர் குடும்பத்திற்கு தமிழக அனைத்து சிறப்பாசிரியர் சங்கம் சார்பில் ரூ.40 ஆயிரம் நிதியுதவி வழங்கினர். திருத்துறைப்பூண்டி அரியலூர் பகுதியை சேர்ந்தவர் வீரசேகரன். இவர் முத்துப்பேட்டை ஒன்றியம் ஜாம்புவானோடை அரசு உயர்நிலைப்பள்ளியில் பகுதி நேர இசையாசியராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 20ம் தேதி இறந்தார். அரசு சார்பில் எந்த உதவியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு இல்லாத நிலையில் தமிழக அனைத்து சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் ரூ 40 ஆயிரம் நிதி உதவியை மறைந்த இசைஆசிரியரின் மனைவி ஜெயந்தியிடம் மாநில பொருளாளர் ஹேமா, ஒன்றிய தலைவர்கள் திருத்துறைப்பூண்டி நேதாஜி, முத்துப்பேட்டை கௌதமன் மற்றும் கணேசவாணி, மகேஸ்வரி, வீரசேகரன் ஆகியோர் வழங்கினர்.

Related Stories: