பாரதியார் பிறந்தநாள் விழா

பொன்னமராவதி, டிச.12: பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதியார் 138வது பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது விழாவிற்கு பள்ளி முதல்வர் முருகேசன் தலைமை வகித்தார். தனி அலுவலர் சந்திரன் வரவேற்றா. பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் அலங்கரிக்கப்பட்ட பாரதியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் ஆசிரியர்களும், இளம் மாணவர்களும் பாரதியார் குறித்து விளக்கவுரையாற்றினர். விழாவில் துணை முதல்வர்கள் வைதேகி, கலைமதி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை சார்ந்த ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: