அரியலூர், டிச. 12: அரியலூர் நகரில் செந்துறை சாலையின் நடுவே பாம்பு ஒன்று தலையை தூக்கி கொண்டு படமெடுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் நகரில் செந்துறை சாலையின் நடுவே ஒரு பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்றது. சிறிது நேரத்தில் அந்த பாம்பு எங்கேயும் செல்லும் அங்கேயே தலையை தூக்கி கொண்டு நின்றது. இதனால் சாலையின் இருபுறமும் வந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தினர். பின்னர் அந்த பாம்பை விரட்டி விட்டனர். ஆனால் அந்த பாம்பு செல்லாமல் அங்கேயே இருந்தது.