கம்பம், டிச.11: கம்பம் சக்தி விநாயகர் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் “பிட் இந்தியா” மாரத்தான் போட்டி நடைபெற்றது.தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது உடல் திறனை வளர்த்துக் கொள்ளவும், உடல் உறுதியை பேணும் வகையிலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்ற வேண்டி “பிட் இந்தியா” திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கம்பம் சக்தி விநாயகர் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் “பிட் இந்தியா” மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை பள்ளி தாளாளர் அச்சுதநாகசுந்தர் துவக்கி வைத்தார்.