கும்பகோணம், டிச. 11: கும்பகோணம் பகுதி கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடைக்காரர்களுக்கு ரூ.57 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் வெளிமாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இரவு நேரத்தில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று மதியம் கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நகர்நல அலுவலர் பிரேமா, சுகாதார ஆய்வாளர்கள் டேவிட் பாஸ்கரராஜ், முருகானந்தம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சோதனையிட்டனர்.