2வது நாளில் 130 பேர் மனு தாக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. மொத்தம் 387 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. நேற்று முன்தினம், மொத்தம் 187 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 2வது நாளான நேற்று,  மாவட்டம் முழுவதும் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 31 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 97 பேரும் என மொத்தம் 130 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, நேற்று யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இன்று அதிகமானோர் மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: