அரியலூர், டிச. 10: அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. செந்துறையில் உள்ள சிவதாண்டேஸ்வரர் கோயிலில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து காளை வாகனத்தில் சிவதாண்டேஸ்வரர், அம்பாள் பிரகார வீதியுலா நடந்தது. திருஞானசம்பந்தர் அறக்கட்டளை சிவனடியார்கள், செந்துறை, மருவத்தூர், நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், நக்கம்பாடி, இலைக்கடம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல் கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில், பெரியமறை வேதபுரீஸ்வரர் கோயில், காமரசவல்லி கார்கோடேஸ்வரர் கோயில், திருமானூர் கைலாசநாதர் கோயில், காரைப்பாக்கம் மாணிக்க வண்ணநாதர் கோயில், குழுமூர் ஜெயபுரீஸ்வரர் கோயில், சென்னிவனம் தீர்க்கபுரீஸ்வரர் கோயில், பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் கோயில், நாகல்குழி காசிவிசுவநாதர் கோயில், சொக்கநாதபுரம் சொக்கநாதர் கோயில், பழமலைநாதபுரம் பழமலைநாதர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.