நாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்து விபத்து

வாழப்பாடி, டிச.10: வாழப்பாடி அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சேலத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சேசன்சாவடி அருகே கார் வந்தபோது, சாலையின் குறுக்கே நாய் வந்துள்ளது. இதில், நிலை தடுமாறிய கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 4 பெண்கள், 2 சிறுவர்கள், முதியவர், டிரைவர் உட்பட 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அருகிலுள்ள பொதுமக்கள் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: