மணலோடை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரிடம் நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

மார்த்தாண்டம், டிச.10: தக்கலை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் விமலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜரெத்தினம் மற்றும் போலீசார் மணலோடை வலியமலை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார்(53) என்பவர் வீட்டருகே திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து கள்ளச்சாராயம் மற்றும் அதை காய்ச்ச பயன்படுத்திய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசாரை கண்ட

வுடன் தப்பியோட முயன்ற குமாரையும் போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. குமாரை போலீசார் காவல் நிலையம் கொண்டுவந்து விசாரித்தனர். மதுவிலக்கு டிஎஸ்பி பவுன்ராஜ் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார்.

Related Stories: