மார்த்தாண்டம், டிச.10: தக்கலை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் விமலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜரெத்தினம் மற்றும் போலீசார் மணலோடை வலியமலை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார்(53) என்பவர் வீட்டருகே திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து கள்ளச்சாராயம் மற்றும் அதை காய்ச்ச பயன்படுத்திய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.