தென்தாமரைகுளம் அருகே நண்பனை தாக்கிய தொழிலாளி தற்கொலை

தென்தாமரைகுளம். டிச.10 :  தென்தாமரைகுளம் அருகே தேரி விளையை சேர்ந்தவர் நாகலிங்க ராஜா(23). கட்டிடத் தொழிலாளி. சம்பவத்தன்று போதையில் தனது நண்பரான குமரேசனை தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் காயம் அடைந்தார். இதற்கிடையே நண்பனை தாக்கி விட்டோமே என்று நாகலிங்க ராஜா மனம் உடைந்தார். இதனால் விரக்தி அடைந்தவர் வீட்டில் விஷம் குடித்த நிலையில் கிடந்தார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை நாகலிங்க ராஜா இறந்தார். இது தொடர்பாக தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கென்னடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories: