தொண்டி, டிச.9: வெங்காயத்தின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறி விட்டது என்று மாநில தமுமுக பொதுச்செயலாளர் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் காஜா கனி நேற்று தொண்டியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘வெங்காயத்தின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறி விட்டது. நிதி அமைச்சர்ெமுறையற்ற பதிலை தருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானாவில் நடைபெற்ற என்கவுண்டர் முறை சரியானது அல்ல. குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் முலமே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றம் கால தாமதம் செய்வதால் துப்பாக்கி சூட்டை மக்கள் ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.