ஆண் சடலம் போலீசார் விசாரணை

புவனகிரி, டிச. 4:  சிதம்பரம் அருகே கூடுவெளி கிராமத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக சிதம்பரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடுவெளி கிராம நிர்வாக அதிகாரி தமிழ்காவலன் சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: