பரமக்குடி, டிச.3: பார்த்திபனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் வார விழா கொண்டாடப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் டிச.2 முதல் 8ம் தேதி வரை கர்ப்பிணி தாய்மார்கள் வார விழா கொண்டாட அறிவுறுத்தியது. அதன்படி நடைபெற்ற இவ்விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சைனி செராபுதீன் தலைமை வகித்தார். பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன், மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் நலவாழ்வு திட்ட கூடுதல் இயக்குனர் வனஜா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றி கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் கர்ப்பகால பராமறிப்பிற்கான பொருள்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினார்.