தொண்டி, டிச.3: தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால்
வயல்களில் உள்ள தண்ணீர் வெளியேற முடியாமல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவாடானை தாலுகா முழுவதும் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதில் தொண்டி, நம்புதாளை, முகிழ்த்தகம் உள்ளிட்ட பகுதி வயல்கள் முழுவதும் தண்ணீரில் நிரம்பி மூழ்கியுள்ளது. கடலுக்கு தண்ணீர் சென்றாலும் மழை விடாமல் பெய்து கொண்டிருப்பதால், தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெரு தண்ணீர் மற்றும் அனைத்து தண்ணீரும் ஒருங்கே செல்வதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. தொடாந்து வயல்களில் தண்ணீர் கிடப்பதால் தற்போது நட்ட பயிர்கள் வேர் பிடிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.