ஆர்.எஸ்.மங்கலம், டிச.3: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர் பண்ணை மீனவர்கள் நிறைந்த கிராமமாகும். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் இவர்களுடைய வாழ்வாதாரமே மீன்பிடி தொழில் மட்டுமே. இங்குள்ள மக்கள் பெரும் மழை, புயல் போன்ற காலங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் விதமாக புயல் காப்பகமோ அல்லது பல்நோக்கு சேவை மையக் கட்டிடமோ இல்லை. ‘கடந்த ஆண்டு ஏற்பட்ட புயலுக்கு கூட இங்கிருந்த பொதுமக்களை பாதுகாப்பு நலன் கருதி 3 கி.மீ தூரம் உள்ள உப்பூர் பள்ளிக்கூடங்களில் தங்க வைத்தார்கள். கடலோரக் கிராமங்களான திருப்பாலைக்குடி, முள்ளிமுனை, நம்புதாளை உள்ளிட்ட பல கிராமங்களில் கட்டப்பட்டுள்ளது போல், இந்த பகுதியிலும் பல்நோக்கு சேவை மையக் கட்டிடம் கட்ட வேண்டும். மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.