குமாரபாளையம் காவிரி ஆற்றங்கரையில் இளம்பெண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை

குமாரபாளையம், டிச.3: குமாரபாளையம் காவிரி ஆற்றங்கரையில், இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா என ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.குமாரபாளையம் காவிரி ஆற்றில் சார்பதிவாளர் அலுவலுகம் பின்புறமுள்ள, காவிரி கரையில் நேற்று காலை 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலம் கரை ஒதுங்கியது. அவர் சுடிதார் அணிந்திருந்த நிலையில், காலில் கொலுசும் இருந்தது. காலில் மெட்டி, கழுத்தில் தாலிக்கயிறு ஏதும் இல்லை. இவர் யார், எந்த ஊர் என்றும் தெரியவில்லை. காவிரியில் அதிகப்படியான தண்ணீர் வருவதால், இவர் எடப்பாடி, பவானி போன்ற பகுதிகளில் இருந்து அடித்து வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: