பெரம்பலூர், நவ. 29: பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 3ம் தேதி நடக்கிறது. பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தனியார்த்துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி சேர்க்கை முகாம் நடக்கிறது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி நிறுவனங்களான அமெசான், ரிலையன்ஸ், அசன்ஜர், பிலிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் சார்பில் மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் கலந்து கொண்டு 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான கல்வித்தகுதி, இளங்கலை வேதியியல், மைக்ரோபயாலஜி போன்ற கல்வி தகுதிக்கும், கணினி பயிற்சி முடித்தவர்களையும் தங்களுக்கு தேவையான காலி பணியிடங்களுக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பளத்துக்கு மாற்றுத்திறனுடையோரை தேர்வு செய்யவுள்ளனர்.