ஜெயங்கொண்டம், நவ. 28: ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் தேவாமங்கலம் கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்கீழ் (அட்மா) நிலக்கடலை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி துவக்க விழா நடந்தது.வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொ) சுப்ரமணியன் தலைமை வகித்தார். சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர் அசோக்குமார் பேசியதாவது: நிலக்கடலை சாகுபடியின்போது அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கை இட வேண்டும். விவசாயிகள் விதைக்கும் முன் 45- 50 விதைக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் மற்றும் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் வேரழுகல் மற்றும் வேர்க்கரையான் தாக்குதல் இருக்காது. உரங்கள் எளிதில் மக்குவதற்கு டிகம்போஸர் பயன்படுத்த வேண்டும்.