காஞ்சிபுரம், நவ.28: காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த மணமை கிராமத்தில் நீர்வரத்துக் கால்வாய் அருகில் உள்ள ஏரிக்கரையை தனியாருக்கு தாரை வார்த்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள், கலெக்டர் பொன்னையாவிடம் புகார் அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் மணமை கிராமத்தில் ஏரி நீர்வரத்து கால்வாய் ஒட்டி, 8அடி அகலம் உள்ள பெரிய ஏரிக்கரையை, சென்னையைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு அதிகாரிகள் தாரை வார்த்து விட்டார்கள்.