திருச்சி, நவ.27: ரயில்வே சுங்கப்பாதையில் மழைநீர் தேங்காமலும், மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். லால்குடி ரயில்வே கேட் உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மழை உட்புகாதவாறு தடுப்பு சுவர்கள் அமைக்காததாலும், உட்புகும் மழைநீர் வெளியேற வழிவகை செய்யாததால் தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்கள் நடக்க இயல முடியாதபடி இம்சை தருகிறது. இந்த கொசுக்கள் கடிப்பதால் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.