பெரம்பலூர்,நவ.27: பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து கொள்ள வரும் 29ம்தேதி வரை காலநீட்டிப்பு வழங் கப்பட்டுள்ளது என பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுவிநியோகத்திட்டத்தின்கீழ் பயன் பெறும் சர்க்கரை குடும்ப அட்டை தாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற் கான விண்ணப்பங்களை குடும்ப அட்டையின் நகலி னை இணைத்து (26ம்தேதி) நேற்றுவரை www.tnpds.gov . in என்ற இணைய தளம் வாயிலாகவும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலக ங்களிலும், நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு முதலமைச்சரால் தெரிவிக்கப் பட்டிருந்தது.