சாயல்குடி, நவ.26: கிழக்கு கடற்கரை சாலையோரம் இருக்கக்கூடிய கண்மாய், ஊரணிக்கரைகளின் மண் மழைக்கு சரிந்து சாலையில் விழுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.சாயல்குடி வழியாக ராமநாதபுரம் செல்ல கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. கடந்தாண்டு இச்சாலையில் மராமத்துடன் கூடிய புதிய சாலை அமைக்கும் பணி முடிவுற்றது. பெயரளவிற்கு நடைபெற்ற சாலை வேலைகள் முறையாக நடைபெறவில்லை என புகார் எழுந்தது. சாலையின் இருபுறமும் கிராவல்மண் போடாததாலும், நீர்நிலை ஓரங்களில் தடுப்புச்சுவர் கட்டாததாலும் மண் அரிமானம் ஏற்படுகிறது. சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.
மேலும் சாயல்குடி பெரிய கண்மாய், கூரான்கோட்டை விலக்கு கண்மாய், கடலாடி அருகே கீழச்செல்வனூர் கண்மாய், ஊரணி, இதம்பாடல் கண்மாய் ஆகியவை பிரதான சாலையின் ஓரங்களில் அமைந்துள்ளன.