திருச்சி, நவ. 22: திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சகிலாபானு(52). இவர் மகன், மருமகளுடன் வசித்து வருகிறார்.
நேற்று மகன் வேலைக்கு சென்ற நிலையில் மருமகளுடன சகிலாபானு வீட்டில் இருந்தார். இந்நிலையில் 2 வடமாநில வாலிபர்கள் பாத்திரம் மற்றும் வெள்ளி பொருட்களை பாலிஷ் போடுவதாக கூறி அப்பகுதியில் சுற்றினர். தொடர்ந்து பானு வீட்டிற்கு சென்ற 2 பேரும் குக்கருக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறினர். இதையடுத்து வீட்டில் இருந்த பழைய குக்கரை எடுத்து வந்து கொடுத்ததில் பாலிஷ் போட்டு கொடுத்தனர். அதை தொடர்ந்து வெள்ளி கொலுசுவை கொடுத்ததையடுத்து அதனையும் பாலிஷ் போட்டு கொடுத்தனர். இதில் நகை இருந்தால் கொடுங்கள் பாலிஷ் போட்டு தருகிறோம் என கூறியதையடுத்து பானு தான் அணிந்திருந்த 4 பவுன் செயினை கழற்றிக் கொடுத்தார்.