திருச்சி, நவ.22: திருச்சியில் 2ம் நிலை ஆண், பெண் காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வில் தேர்வானவர்களுக்கு 3வது கட்ட தேர்வு நடந்து வருகிறது. 2வது நாளில் இதில் 723 ஆண்கள் தேர்வாகினர். தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை காவலர்கள், தீயணைப்புத்துறை பணிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கு கடந்த 13 முதல் 15ம் தேதி வரை நடத்தப்பட்ட 3 நாட்கள் தேர்வில் மொத்தம் 1,706 பேர் தேர்வாகினர். பெண்களுக்கான காவலர் தேர்வு 9ம் தேதி நடக்க இருந்தது. பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.