சாயல்குடி, நவ.22: இளஞ்செம்பூர் அரசு பள்ளி மாணவர்கள் நீர்நிலைகளில் பனைவிதைகள் நட்டனர்.
கண்மாய், ஊரணி போன்ற நீர்நிலைகளில் மண் அரிமானம் தடுப்பதற்கு பனை விதைகள் விதைக்கப்பட்டு வருகிறது. இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி தேசிய பசுமைபடை மாணவர்கள் சார்பில் இளஞ்செம்பூர், பூக்குளம், காலனி பகுதியிலுள்ள கண்மாய், ஊரணி கரைகளில் பனைவிதைகள் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் ரெனிஜா தலைமை வகித்தார். தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் முன்னிலையில் நடப்பட்டது.