மதுரை, நவ.22: மதுரையில் தெரு நாய் ஒன்று தனது குட்டி இறந்தது கூட தெரியாமல் அதனை வாயில் கவ்விக்கொண்டு, சுற்றியபடி அலைந்து திரிவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் ரோட்டில் உள்ளது நேரு நகர். இப்பகுதியில் தெரு நாய் ஒன்று தனது குட்டியுடன் சுற்றி திரிந்தது. எதிர்பாராதவிதமாக அந்த குட்டி நாய், இரு நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி இறந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த தாய் நாய், தனது குட்டி இறந்தது கூட தெரியாமல் அதை வாயில் கவ்விக் கொண்டு ஒவ்வொரு இடமாக சுற்றித் திரிந்தபடி இருக்கிறது. இதனை இப்பகுதி பொதுமக்கள் பரிதாபத்துடன் பார்த்து வருகின்றனர்.