டூவீலர் மீது கார் மோதியது கூலித்தொழிலாளி பலி

செம்பட்டி, நவ. 22: செம்பட்டி அருகே கன்னிவாடியை அடுத்த பண்ணைப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி கோட்டையன் (57). இவர் தனது டூவீலரில் செம்பட்டி வந்திருந்தார். பின்னர், பண்ணைப்பட்டி நோக்கி திரும்பிச் சென்றபோது, வீரக்கல் பிரிவு அருகே சேலத்தில் இருந்து சபரிமலை நோக்கி சென்ற கார், கோட்டையன் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோட்டையன், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்பு.

Related Stories: