ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது

பல்லாவரம், நவ.22: பம்மல், சங்கர் நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்ப்பவர் பால்துரை (38). நேற்று முன்தினம் இரவு பால்துரை, பொழிச்சலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, பொழிச்சலூர் பிரதான சாலையில் சந்தேகப்படும்படி 3 பேர் நின்றிருந்தனர்.அவர்களிடம், நீங்கள் யார். எதற்காக இந்த நேரத்தில் இங்கு நிற்கிறீர்கள் என பால்துரை விசாரித்தார். அதற்கு அவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் அவர், 3 பேரையும் காவல் நிலையம் வரும்படி அழைத்துள்ளார். உடனே 3 பேரும், போலீஸ்காரர் பால்துரையை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பமுயன்றனர்.

இதை பார்த்த பொதுமக்கள், அவர்களை விரட்டி சென்று 2 பேரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். ஒருவர் தப்பிவிட்டார். பின்னர், 2 பேரையும், சங்கர்நகர் போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பொழிச்சலூரை சேர்ந்த மணிகண்டன் (33) காந்தி (38) என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய இன்பராஜ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: