பல்லாவரம், நவ.22: பம்மல், சங்கர் நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்ப்பவர் பால்துரை (38). நேற்று முன்தினம் இரவு பால்துரை, பொழிச்சலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, பொழிச்சலூர் பிரதான சாலையில் சந்தேகப்படும்படி 3 பேர் நின்றிருந்தனர்.அவர்களிடம், நீங்கள் யார். எதற்காக இந்த நேரத்தில் இங்கு நிற்கிறீர்கள் என பால்துரை விசாரித்தார். அதற்கு அவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் அவர், 3 பேரையும் காவல் நிலையம் வரும்படி அழைத்துள்ளார். உடனே 3 பேரும், போலீஸ்காரர் பால்துரையை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பமுயன்றனர்.