திருப்போரூர், நவ.22: விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்திஙர ₹1.18 கோடியில் உணவகம், உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது.மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இதன் வளாகத்தில் ₹35 லட்சத்தில் நுழைவாயில், ₹43 லட்சத்தில் உணவகம், ₹40 லட்சத்தில் உடற்பயிற்சிக்கூடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணை வேந்தர் ஷீலா ஸ்டீபன் வரவேற்றார். தமிழக அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இப்போது அவர் பேசுகையில், விளையாட்டு துறையில் சிறந்த போட்டியாளர்களை உருவாக்க வேண்டும் என தொலைநோக்கு சிந்தனையுடன் அரசு செயல்படுகிறது. மாணவர்களுக்கு விளையாட்டு துறை முன்னேற்றத்துக்கு கல்வியாளர்கள், விளையாட்டில் சிறந்தவர்கள் உள்பட 25 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். இவர்கள், விளையாட்டு துறையில் ஆண்டுக்கு 100 பேர் கொண்ட மாணவர்களை தேர்வு செய்வர்.