ஈரோடு, நவ.22: ஈரோடு சிந்தாமணி கூட்டுறவு பண்டக சாலையில் இந்தாண்டு ரூ.64 லட்சத்திற்கு மட்டுமே பட்டாசு விற்பனை நடந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டுறவு நிறுவனமான சிந்தாமணி கூட்டுறவு பண்டக சாலை அதன் கிளைகள் மூலம் பல ஆண்டுகளாக பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ரூ.1 கோடியே 25 லட்சத்திற்கு மேல் பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு வெறும் ரூ.64 லட்சத்திற்கு மட்டுமே பட்டாசு விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டை காட்டிலும் பாதிக்கும் குறைவாகவே இந்தாண்டு விற்பனையானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.