திருவாடானை, நவ.20: சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்று விபத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவத்தில், டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாடானை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு தொண்டியில் இருந்து சரக்கு வாகனத்தில் தொண்டியை சேர்ந்த அப்துல் ஹக் மகன் முகமது உசேன் சென்றார். வாகனத்தில் 26 ஆட்கள் சென்றுள்ளனர். வாகனம் பி.வி.பட்டினம் அருகே சென்றபோது எதிர்பாராவிதமாக தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பாண்டியம்மாள் மற்றும் புஷ்பம் ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.