பரமக்குடி, நவ.20: பரமக்குடியில் காங்கிரஸ் கட்சியின் மாநில நெசவாளர் அணியின் சார்பாக, மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, காந்தி சிலை முன்பு அவரது உருவப் படத்திற்கு மாநில நெசவாளர் அணி செயலாளர் கோதண்டராமன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் மகாதேவன், ஐ.என்.டி.யு.சி முன்னாள் தலைவர் சேஷய்யன், மாநில நெசவாளர் அணி செயற்குழு உறுப்பினர் நாகராஜன், ஆர்.டி.ஐ அணி மாநில செயலாளர் செந்தில் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.