ஊத்துக்கோட்டை, நவ. 20: ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி கிராமத்தில் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள குளத்துக்கு தடுப்பு சுவர் இல்லாததால் வாகனங்கள் விழும் அபாயம் உள்ளது. எனவே அந்த குளத்துக்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019 - 2020ம் நிதியாண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆதாரங்களை சீரமைக்க அரசு திட்டமிட்டது. அதன் அடிப்படையில் ஆரணியாறு வடிநில கோட்டத்தின் மூலம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் 10 ஏரிகள், கும்மிடிபூண்டி வட்டத்தில் 9 ஏரிகள், பொன்னேரி வட்டத்தில் 11 ஏரிகள் என 30 ஏரிகளை தூர்வாரி, கரையை பலப்படுத்தவும், ஏரி கலங்கல் மற்றும் மதகுகள் சீரமைத்தல், வரத்து கால்வாய் தூர்வாருதல் போன்ற பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி 10.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.