மூத்த குடிமக்களுக்கான போட்டி பரமத்திவேலூர் முதியவர் சாதனை

பரமத்திவேலூர், நவ.20: திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான மாஸ்டர்ஸ் என்ற மூத்த குடிமகன்களுக்கான விளையாட்டு போட்டியில் பரமத்திவேலூரை சேர்ந்த சிவசாமி கலந்து கொண்டு வட்டு எறிதலில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமகன்களுக்கான மாஸ்டர்ஸ் மாநில அளவிலான விளையாட்டு போட்டி திருச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். இதில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள எஸ்.வாழவந்தி ஊராட்சிக்குட்பட்ட சின்ன கரசப்பாளையத்தைச் சேர்ந்த சிவசாமி(62) வட்டு எறிதல் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற அவருக்கு சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கிப்பட்டது. முதியவர்களுக்கான மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சொந்த ஊர் திரும்பிய அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்து பாராட்டு தெரிவித்தனர். 

Related Stories: