சேந்தமங்கலம், நவ.20: சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 102வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சாமி ஜெகநாதன் தலைமை தாங்கி இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் மகளிரணி தலைவி மகேஸ்வரி, நகர தலைவர் ராஜா, நிர்வாகிகள் மாராயி, பூங்கோதை, மனோஜ், கலைச்செல்வி, மகாலட்சுமி, சுகன்யா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், பேளுக்குறிச்சியில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு
இந்திராகாந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.