ஈரோடு, நவ. 20: ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராம மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி நடத்தி உற்சாகப்படுத்தப்போவதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார். இது குறித்து ஈரோடு எஸ்.பி. சக்திகணேசன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மலைக்கிராமங்களான தாளவாடி, ஆசனூர், பர்கூர், கடம்பூர் மற்றும் கிராமப்புறங்களான பங்களாபுதூர், டி.என்.பாளையம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தவும், ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளேன். அதன்படி வரும் 19ம் தேதி முதல் ஒவ்வொரு கிராமமாக சென்று போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க உள்ளேன்.