தஞ்சை, நவ. 19: தஞ்சையில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் காசிநாதன் தலைமை வகித்தார். உள்ளாட்சி தேர்தல் பணிகள், மாநில நிர்வாகக்குழு முடிவு மற்றும் தற்போதைய அரசியல் நிலைகளை விளக்கி தேசியக்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் பாரதி பேசினார். தஞ்சை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், சிற்றூராட்சி தலைவர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர், மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி தலைவர், நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு போட்டியிடக்கூடிய வாய்ப்புள்ள இடங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் இடங்களை இறுதி செய்வதென முடிவு செய்யப்பட்டது.