மானாமதுரை, நவ.19: மானாமதுரை பகுதியில் கடந்த ஒன்றரை மாதங்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் மண்பாண்ட உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு தொழிலாளர் குடும்பங்கள் கடும் நெருக்கடியை சந்திந்து வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மண்பாண்ட தொழிலாளர் ஷெட்டில் மழைநீர் புகுந்துள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக லட்சக்கணக்கான மதிப்புள்ள மண்பாண்ட மூலதன மண் அனைத்தும் கரைந்து வாறுகாலில் சென்று கொண்டிருக்கின்றன. தயாரித்து வைத்திருக்கும் மண்பாண்ட பொருட்களை உலர வைக்க முடியவில்லை.