பரமக்குடி, நவ.19: பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி., நினைவு நாளில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சார்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி, பரமக்குடியில் அனைத்து வெள்ளார் மகாசபை சார்பாக குருபூஜை விழா நடைபெற்றது. இதில் திமுக,அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியின் சார்பாக, மணிநகர் பகுதியில் உள்ள வ.உ.சி.,சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பாக மாநில தீர்மானக்குழு துணைத்தலைலவர் சுப.த.திவாகரன் தலைலமையில்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் துரைச்சாமி, மாவட்ட பிரதிநிதி சேதுபதி, நகர் செயலாளர் சேதுகருணாநிதி, நகர் மாணவரணி ராமதாஸ், சங்கர் உள்ளிட்ட பலர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர்.