திருப்புத்தூர், நவ.19: திருப்புத்தூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட கிளையின் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட தலைவர் அருள் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்டச் செயலாளர் அன்பரசு பிரபாகர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் துணைப் பொதுச்செயலாளருமான ரெங்கராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் போராட்டத்தின் போது சிறை சென்ற 4 ஆசிரியர்களுக்கு கணையாழி அணிவிக்கப்பட்டது.