தொண்டி, நவ.19: நம்புதாளை அரசு உயர் நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் சமுக விரோத செயல்களும் நடைபெறுவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகேயுள்ள நம்புதாளை அரசு உயர் நிலைப்பள்ளி கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிய கட்டிடத்தில் செயல்பட ஆரம்பித்தது. கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி இப்பள்ளி அமைந்து உள்ளது. மாணவர்களுக்கு எவ்வித பாதகாப்பும் இல்லாத நிலையில் கட்டிடம் உள்ளது. கடந்த சில வருடங்களாக சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பது ஆபத்தை எதிர் நோக்கி இருப்பதாக உள்ளது.