தொண்டி, நவ.14: தொண்டியில் வாசகர்கள் அதிகம் செல்லாத பகுதியில் உள்ள நூலகத்தை நகரின் மைய பகுதிக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். ஆரம்ப காலம் முதல் கல்விக்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவும் பல்வேறு தானங்கள் செய்த இடமாகும். பல நூறு ஏக்கர் நிலத்தை பள்ளி கட்டுவதற்கு தானமாக கொடுத்துள்ளனர். ஆனால் இப்பகுதியில் தற்போது நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தொண்டியின் மைய பகுதியான சத்திரம் தெருவில் அரசு கட்டிடத்தில் நூலகம் இயங்கி வந்தது. கட்டிடம் இடிந்ததால் புதுக்குடி பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இது நகரின் கடைசி பகுதியாக இருப்பதால் வாசகர்கள் அதிகமாக செல்வது கிடையாது. மேலும் பெரும்பாலும் இந்த நூலகம் மூடியே கிடைப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். பள்ளி மாணவர்கள் மற்றும் வாசகர்களை அதிகம் கொண்ட தொண்டியில் நூலகம் செயல்படாமல் இருப்பது பெரும் வேதனை அளிக்கிறது.