தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

ஈரோடு, நவ.14:  ஈரோட்டில் தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட இரு வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஈரோடு கே.என்.கே. ரோட்டை சேர்ந்த பழனியப்பன் மகன் முனியப்பன் (29). பெயிண்டர். இவர், மீது திருட்டு, வழிப்பறி, அடிதடி, கொலை உள்ளிட்ட ஐந்து வழக்குகள் உள்ளன. இதேபோல், ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த வெடியப்பன் மகன்  நாகராஜ் (32). கட்டிட தொழிலாளி. இவர் மீதும் திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட ஐந்து வழக்குகள் உள்ளன.

இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதாக கருங்கல்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஈரோடு எஸ்.பி. சக்தி கணேசன், ஈரோடு கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரை செய்தார்.இதை ஏற்ற கலெக்டர் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவு நகல், கோவை மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் கருங்கல்பாளையம் போலீசார் மூலம் தனித்தனியே வழங்கப்பட்டது.

Related Stories: