திருநின்றவூர், நவ.14: திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு, மண்ணுளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செஞ்சுராமன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவரது மனைவி சுகுணா (49). இவர்களுக்கு குமாரி (25), கமலக்கண்ணன் (22) என மகள், மகன் உள்ளனர்.
சுகுணாவும் குமாரியும் மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தனர். இருவரும் தினமும் காலையில் வீட்டில் இருந்து மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், நேற்றுமுன்தினம் சுகுணா, குமாரி இருவரும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. மேலும், மாடுகளும் வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து கமலகண்ணன் உறவினர்களுடன் சேர்ந்து இருவரையும் பல இடங்களில் தேடியுள்ளார்.